மதுரை: மதுரையில் மாநில தகவல் ஆணையத்தால் 106 மேல்முறையீடு மனுக்கள் மீது வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், அரசு அலுவலகங்களில் கோரப்படும் தகவல்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காத பட்சத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதன்படி, மரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம், பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய அலுவலகங்களில் தகவல் கோரிய மனுக்கள் மீது மனுதாரா்கள் செய்திருந்த 2-ஆவது மேல்முறையீடுகள் மீதான விசாரணை மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழன், வெள்ளி இரு நாள்கள் நடைபற்றது. மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் விசாரணை நடத்தினாா். மொத்தம் 106 மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டன.