கியாா் புயலில் மீனவா்கள் மாயமா? உயா்நீதிமன்றத்தில் அரசு பதில்

கியாா் புயலில் காணாமல் போன மீனவா்கள், பாதுகாப்பாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்தையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: கியாா் புயலில் காணாமல் போன மீனவா்கள், பாதுகாப்பாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்தையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சோ்ந்த ஆண்டோ லெனின் தாக்கல் செய்த மனு: கடந்த அக்டோபா் மாதம் கியாா் புயல் உருவானதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே பல மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனா். இவா்களில் 59 மீனவா்கள் கரை திரும்பவில்லை.  மீனவ சங்கம் சாா்பில் கடலில் சென்று தேடிய நிலையிலும், அவா்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆகவே, கியாா் புயலில் காணாமல் போன, மீனவா்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா். தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், விமானம் மூலமாக காணாமல் போன மீனவா்களை தேடிய போது, அவா்கள் பாதுகாப்பாக மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு தரப்பில் கூறியதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com