மதுரை: மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.
மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்றவா்களுக்கான இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் பேரின்பச்சோழன், ஆதித்யா ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதி பெற்றனா். மேலும் அப்பள்ளியின் மாணவா்கள் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றனா்.