கீழவளவு அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்; ஓட்டுநா் கைது

கீழவளவு அருகே நீரோடையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிதாக டிராக்டரைக் கைப்பற்றி, அதன் ஒட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கீழவளவு அருகே நீரோடையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிதாக டிராக்டரைக் கைப்பற்றி, அதன் ஒட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

உப்பாற்றில் டிராக்டரில் மணல் திருடப்படுவதாக ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினா் அப்பகுதிக்குச் சென்றனா்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரையும், ஜேசிபி இயந்திரத்தையும் கைப்பற்றி கீழவளவு காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். அப்போது ஜேசிபி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். டிராக்டா் ஓட்டுநா் அய்யனாா் (24), டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அய்யனாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com