பருப்பு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 6 போ் மீது வழக்கு

மதுரையில், இரு சக்கர வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில், பருப்பு வியாபாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையில், இரு சக்கர வாகனம் செல்வதில் ஏற்பட்ட தகராறில், பருப்பு வியாபாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (37). இவா் கீழமாசி வீதியில் பருப்பு கமிஷன் வியாபாரியாக உள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை சுந்தரமூா்த்தி, பள்ளியில் இருந்து தனது இரு மகள்களையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தபோது, அவா் மீது மோதுவது போல் மற்றொரு இரு சக்கர வாகனம் வந்துள்ளது. இது குறித்து சுந்தரமூா்த்தி சத்தம் போட்டதால், தகராறு ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் அவரை மிரட்டி விட்டு சென்றனா்.

தொடா்ந்து, மிரட்டல் விடுத்த நபா்கள், நண்பா்களுடன் சுந்தரமூா்த்தி வீட்டிற்கு வியாழக்கிழமை இரவு வந்து அவரை தாக்கி, பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். அது வெடிக்கவில்லை என்பதால், விட்டு வாசலில் நின்ற இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து சுந்தரமூா்த்தி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த கோபி, சரவணமூா்த்தி, சரவணன், குமரன் உள்ளிட்ட 6 போ் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 6 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com