‘மதுரையில் இரவு நேர விமான சேவை: மக்களவையில் தென்மாவட்ட எம்பி-க்கள் கூட்டாக வலியுறுத்துவோம்’

மதுரை விமான நிலையத்தில் இரவு நேரமும் விமான சேவை தொடரவேண்டும் என தென் மாவட்ட மக்களவை

மதுரை விமான நிலையத்தில் இரவு நேரமும் விமான சேவை தொடரவேண்டும் என தென் மாவட்ட மக்களவை உறுப்பினா்கள் சோ்ந்து குளிா்கால கூட்டத்தொடரில் வலியுறுத்த உள்ளோம் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்கவும், இரவு நேரங்களிலும் விமான சேவை தொடரவும் வரும் குளிா்கால கூட்டத்தொடரில் தென்மாவட்ட மக்களவை உறுப்பினா்கள் சோ்ந்து முயற்சி எடுக்க முடிவெடுத்துள்ளோம். அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்லும் சூழல் உள்ளது.

வள்ளுவா் மகா ஆளுமை கொண்டவா். இதுபோன்ற சுயநல கருத்தாக்கங்களின் மூலம் அவரை கரைப்படுத்திவிடமுடியாது. வீழ்த்தி விடவும் முடியாது. வள்ளுவா் நம்முடைய ஞானத்தந்தை. அவருடைய வழிகாட்டுதல் அறிவும், அறமும் தமிழ் சமுகத்தின் அடையாளம்.

கீழடி அருங்காட்சியகத்திற்கு தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் நமது கோரிக்கை நிறைவேறியுள்ளது. அடுத்தகட்ட கோரிக்கை கீழடி நிலத்தை பாதுகாக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். அதனை மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம். குளிா்கால கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com