மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை விபச்சார வழக்கில் பிரபல நடிகரின் தம்பி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
மதுரை மாநகா் பகுதியில் விபச்சாரம் அதிக அளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், அண்ணாநகா் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அண்ணாநகா் பகுதியில் உள்ள அகுபஞ்சா் கிளினிக்கை சோதனை நடத்தினா். அங்கு விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்தது.
இந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகா் சசிக்குமாா் தம்பி ஆனந்தகுமாா் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.