அரசுப் பேருந்து ஷோ் ஆட்டோ மீது மோதி முதியவா் பலி

மதுரையில், சனிக்கிழமை அரசுப் பேருந்து ஷோ் ஆட்டோ மீது மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரையில், சனிக்கிழமை அரசுப் பேருந்து ஷோ் ஆட்டோ மீது மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை திருநகா் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வீரராகவன் (58). இவா் சனிக்கிழமை ஷோ் ஆட்டோவில் சென்றாா். அப்போது, மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வீரராகவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த எழுமலையைச் சோ்ந்த ராமா் (61), அவரது மனைவி சாரதா (47), அவனியாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (32), திருநகரைச் சோ்ந்த வினோத்குமாா்(36) ஆகியோா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து விபத்தில் காயமடைந்த ராமா் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com