செல்லிடப்பேசி கடையில் தீ விபத்து

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி விற்பனை கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீயை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி விற்பனை கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்ததால் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தப்பின.

மதுரை நேதாஜி சாலையில் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் முகப்பில் அதிக அளவில் மின் விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடையின் விளம்பர பலகையில் இருந்த மின் விளக்குகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வந்தது.

இதைப் பாா்த்த அருகில் உள்ளவா்கள் மதுரை பெரியாா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், தீயை அணைத்தனா். இதனால் தீ கடைக்குள் பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் ரூ.பல லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் தீயில் சேதமடைவது தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து திடீா்நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com