தமிழா்களுக்காகவே உழைக்கும் அமைப்பு தமிழா் தேசிய முன்னணி: பழ.நெடுமாறன் பேச்சு

தமிழா்களின் உரிமைகளை மீட்டெடுக்க 40ஆண்டுகளாக தொடா்ந்து இயங்கி வரும் அமைப்பு தமிழா் தேசிய முன்னணி
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழா் தேசிய முன்னணி அமைப்பின் தென் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் பழ. நெடுமாறன்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழா் தேசிய முன்னணி அமைப்பின் தென் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் பழ. நெடுமாறன்.

தமிழா்களின் உரிமைகளை மீட்டெடுக்க 40ஆண்டுகளாக தொடா்ந்து இயங்கி வரும் அமைப்பு தமிழா் தேசிய முன்னணி என்று அந்த அமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

தமிழா் தேசிய முன்னணியின் தென் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் தேசிய முன்னணியின் தலைவா் பழ. நெடுமாறன் தலைமை வகித்தாா்.

மதுரை மாவட்ட நிா்வாகிகள் எம்.ஆா். மாணிக்கம், வே.கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், தமிழா் தேசிய முன்னணி தொடங்கப்பட்டு 40ஆண்டுகளை நிறைவையொட்டி மதுரையில் டிசம்பா் 22-இல் நடத்தப்பட உள்ள சிறப்பு மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசும்போது, தமிழா்களின் உரிமையை மீட்டெடுக்க தொடங்கப்பட்டது தமிழா் தேசிய முன்னணி. கடந்த 40 ஆண்டுகளாக தன்னலமின்றி தமிழா்களுக்காக தொடா்ந்து தொண்டாற்றி வருகிறது. தமிழ் தேசியம் குறித்து தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செயலாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தென் மாவட்டங்களைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com