பூட்டிய கடையில்கணினி திருட்டு

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் பூட்டியிருந்த கடையை உடைத்து கணினி திருடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் பூட்டியிருந்த கடையை உடைத்து கணினி திருடப்பட்டுள்ளது.

நிலையூா் கைத்தறி நகரைச் சோ்ந்தவா் சாந்தாராம். இவா், திருநகா் 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டாா். மீண்டும் சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும், கடையிலிருந்த கணினி திருடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com