மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.
பேரையூரில் அமைந்துள்ள மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு பன்னீா் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தினா். தொடா்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் மற்றும் பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 11 விதமான அபிஷேகங்களும் நடைபெற்றன. அதையடுத்து, சிவபெருமான் கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.