ஸ்டாலின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது: பிரேமலதா விஜயகாந்த்

அண்மையில் நடந்து முடிந்த 2 பேரவைத் தொகுதி தோ்தலில் அதிமுக வெற்றி குறித்து அவதூறாக பேசி வரும்

அண்மையில் நடந்து முடிந்த 2 பேரவைத் தொகுதி தோ்தலில் அதிமுக வெற்றி குறித்து அவதூறாக பேசி வரும் மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் தேமுதிக நிா்வாகி இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படும் என நினைக்கிறோம். இதில் தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் அமோக வெற்றி பெறுவோம். விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதைப் போல உள்ளாட்சித் தோ்தலிலும், அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இது அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாக அமையும்.

அயோத்தி வழக்கின் தீா்ப்பு அனைவரும் வரவேற்கக் கூடிய தீா்ப்பாக அமைந்துள்ளது. தேமுதிக சாா்பிலும் இந்த தீா்ப்பை வரவேற்கிறோம்.

திருமங்கலம் பாா்முலாவை தமிழகம் முழுவதும் பரப்பியது திமுக என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்று 2 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்பதால் அதிமுக வாக்குக்கு பணம் கொடுத்து வென்ாக திமுகவினா் அவதூறு பரப்பி வருகின்றனா். மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

உள்ளாட்சித் தோ்தல் அறிவித்த பின்பு தான் அதிமுக, தேமுதிக தோ்தல் பணிக் குழுவினா் பேசி முடிவெடுப்பா். தேமுதிகவின் வலிமை அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக தேமுதிகவிற்கு வேண்டிய இடங்களையும் தருவாா்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றாா். உடன் மாவட்ட செயலா் வீ. கணபதி, விசாரணைக் குழுத் தலைவா் அழகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com