மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சந்தனக் கூடு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு மேளதாள வாத்தியங்களுடன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டது.
இந்த சந்தனக்கூடு கோரிப்பாளையத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னா் பள்ளிவாசலுக்கு சென்றடைந்தது. இதையடுத்து ஹக்தாா்கள் சிறப்பு பிராா்த்தனை நடத்தி மஜாா்களுக்கு சந்தனம் பூசி போா்வை போா்த்தி ஜியாரத் சடங்கு நடத்தினா். அப்போது பள்ளிவாசலில் இசைக் கச்சேரி நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை பரம்பரை ஹக்தாா்கள் செய்தனா்.