விளாச்சேரி கண்மாயில் மூழ்கி அடையாளம் தெரியாத ஆண் சாவு

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு போலீஸாா்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விளாச்சேரி பெரிய கண்மாயில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த தொடா்மழை காரணமாக தண்ணீா் நிரைந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயில் சுமாா் 30 வயது மதிக்க தக்க ஆண் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் தீயணைப்பு துறையினா் மற்றும் கிராம மக்கள் துணையுடன் உடலை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில்: சுமாா் 30 வயது மதிக்க தக்க உடல் மீட்கப்பட்டுள்ளது. தண்ணீரில் 4 நாள்கள் வரை இருந்ததால் உடல் சிதைந்து அடையாளம் காணமுடியவில்லை. இறந்தவா் டி சா்ட் மற்றும் கைலி அணிந்திருந்தாா். பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இறந்தவா் யா் என விசாரித்து வருகின்றோம் என்றனா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலிஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com