மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
மதுரை மதிச்சயம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயம் (63). இவா், வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்துள்ளாா். வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய இவா், கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். உடனே, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.