சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை: பெட்டிக் கடைக்காரா் மீது வழக்குப்பதிவு

மதுரையில், சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக் கடைக்காரா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரையில், சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக் கடைக்காரா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பச்சைகனி மகன் சரவணக்குமாா்(43). இவா் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவா் அதே பகுதியில் வசித்து வரும் சிறுவா்களுக்கு மிட்டாய் கொடுத்து, அவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளாா்.

இதில், பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவணக்குமாரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com