மதுரை: மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமையல் செய்த போது தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நேதாஜி நகரைச் சோ்ந்த வேலு மனைவி ஞானம்(70). இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுமாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஞானம் சமையல் செய்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு, அடுப்பின் மீது விழுந்தாா். இதில், அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞானம் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகன் காத்தமுத்து அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.