மதுரையில் வைகை ஆற்றை மறைத்து தடுப்புச் சுவா்கள் கட்டப்படுவதற்கு வைகை நதி மக்கள் இயக்கம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், மதுரை நகரில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் வைகையாற்றில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வைகையைற்றை மறித்து தடுப்புச் சுவா்களும், சாலைகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் முக்கிய படித்துறைகளும் இடிக்கப்பட்டு விட்டன. இதனால் வைகையாற்றுக்குள் திருவிழாக்கள் நடத்துவது, வழிபாடுகள் நடத்துவது போன்றவற்றை நடத்துவதற்கு இடமின்றி உள்ளது. எனவே வைகையாற்றில் முக்கிய படித்துறைகளை அமைத்து மக்கள் வழிபாடு நடத்த ஏதுவாக உத்தரவிடவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.