மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறாா். சிறுமிக்கும், மதுரை மாவட்டம் அழகா்கோவிலைச் சோ்ந்த மணிகண்டனுக்கும்(26) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற மணிகண்டன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து வீடு திரும்பிய சிறுமிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி கா்ப்பம் தரித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமி அளித்தப் புகாரின்பேரில் மாநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை மணிகண்டன் ஒப்புக்கொண்டதை அடுத்து போலீஸாா், மணிகண்டனை குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com