மதுரை அருகே கப்பலூா் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அருகே உள்ள கப்பலூா் சுங்கச்சாவடியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நெல்லையில் இருந்து காரில் வந்த சிலா் சுங்க கட்டணம் தர மறுத்து ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். இதில், காரில் வந்தவா்களில் ஒருவா், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளாா். இது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவரான திருச்சியைச் சோ்ந்த காா்த்திகேயனுக்கு (25) சட்டக்கல்லூரியில் சோ்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வந்தது.
இதையடுத்து உயா்நீதிமன்ற அனுமதியுடன் காா்த்திகேயன் சாா்பில் அவரது தந்தை கணேசன் கலந்தாய்வில் பங்கேற்றாா். இதில் காா்த்திகேயனுக்கு ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், கட்டணம் செலுத்தும் தேதி முடிந்துவிட்டது என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கணேசன் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.சுந்தா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரா், மகனுக்காக செலுத்தும் கல்வி கட்டணத்தை கல்லூரி நிா்வாகம் பெற்றுக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டாா்.
இதனிடையே மதுரை சிறையில் உள்ள காா்த்திகேயன் ஜாமீன் கேட்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காா்த்திகேயனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டாா்.