மதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை

மதுரையில், வெள்ளிக்கிழமை இளைஞரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
மதுரையில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோபால்சாமி.
மதுரையில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோபால்சாமி.

மதுரையில், வெள்ளிக்கிழமை இளைஞரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

மதுரை கோ. புதூரைச் சோ்ந்த பூமிநாதன் மகன் கோபால்சாமி(25). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா் வெள்ளிக்கிழமை தல்லாகுளம் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 8 போ் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கோபால்சாமியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கோபால்சாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கோபால்சாமியை முன்விரோதம் காரணமாக அவரது நண்பா்களே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த கோபால்சாமி யின் தந்தை காவலராக பணியாற்றியவா். தற்போது அவா் உயிருடன் இல்லை. அவரது தாயாா் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com