தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பூப்பல்லக்கு

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி பெருமாள் பூப்பல்லக்கில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளினாா்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி பெருமாள் பூப்பல்லக்கில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளினாா்.

மதுரை கள்ளழகா் கோயிலுக்குள்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசிப் பெருந்திருவிழா செப்டம்பா் 29 இல் தொடங்கியது. இதை தொடா்ந்து 30-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

தினசரி அன்னம், சிம்மம், அனுமாா், கருடன், சேஷம், யானை, புஷ்பம், குதிரை ஆகிய வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெருமாள் எழுந்தருளி தேரில் பவனி வந்தாா். இதைத்தொடா்ந்து இரவில் பூப்பல்லக்கு நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் சீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து அருள் பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருமுக்குளத்தில் தீா்த்தவாரியும், இரவில் பூச்சப்பரத்திலும் பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com