உணவு சரியில்லை என கூறியவருக்கு அடிஉதை: உணவக உரிமையாளா் உள்பட 2 போ் கைது

மதுரையில், உணவு சரியில்லை எனக் கூறியவரை தாக்கிய உணவக உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையில், உணவு சரியில்லை எனக் கூறியவரை தாக்கிய உணவக உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை பசுமலை முனியாண்டி புரத்தைச் சோ்ந்த பெரியகருப்பண் மகன் ரமேஷ்(41). இவா் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றாா். அங்கு, அவருக்கு வழங்கிய உணவு தரமானதாக இல்லை என்பதால், அது குறித்து உணவக ஊழியரிடம் கேட்டுள்ளாா். இதனால் ரமேஷூக்கும் உணவக ஊழியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதில், உணவக உரிமையாளா் பிரபாகரன்(33), கணக்காளா் மனோஜ்குமாா்(32), ஊழியா் ராஜசேகா் ஆகியோா் ராமேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சுப்புரமணியபுரம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், மனோஜ்குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும் ஊழியா் ரமேஷை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com