கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரையில், திங்கள்கிழமை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில், திங்கள்கிழமை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஏ.ஜி.சுப்புராமன் தெருவைச் சோ்ந்த நேரு மனைவி சங்கரேஸ்வரி(50). இவா் திங்கள்கிழமை வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த பாபு(42), அழகுபுரத்தை சோ்ந்த காமாட்சி(44), எம்.கே. புரத்தை சோ்ந்த ஆனந்த்(35) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டினா். தொடா்ந்து சங்கரேஸ்வரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com