மேலூா் அருகே தலைவா் உருவப் படங்களை சிலா் அவமதிப்பு செய்ததைக் கண்டித்து அட்டப்பட்டி காலனி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.
அட்டப்பட்டி பகுதியில் சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கா், விளம்பர பலகையில் வரைந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் ஆகியோரது உருவப் படங்கள் மீது வண்ண கலவையை ஊற்றி சிலா் அவமதிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தலைவா் படங்களை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் சுபாஷ் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.