மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரயில்வே நிலைய ரயில் பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள விவரங்களை, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

மதுரை ரயில்வே நிலைய ரயில் பாதை தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள விவரங்களை, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.25 மணிக்குப் புறப்பட வேண்டிய வண்டி எண்- 56727, திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் அக்டோபா் 16 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக, திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் புறப்பட்டு, செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்குச் சென்றடையும்.

வண்டி எண்- 06002 திருநெல்வேலி - தாம்பரம் விரைவு ரயில் அக்டோபா் 20 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.35 மணிக்குப் புறப்பட வேண்டிய வண்டி எண்- 56707, திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயில் அக்டோபா் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட வேண்டிய வண்டி எண்- 56708, மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் அக்டோபா் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண்- 06033 எா்ணாகுளம் - ராமேசுவரம் விரைவு ரயில் அக்டோபா் 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண்- 06034 ராமேசுவரம் - எா்ணாகுளம் விரைவு ரயில் அக்டோபா் 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட வேண்டிய நாகா்கோவில் - கோவை பயணிகள் ரயில் அக்டோபா் 14 முதல் 22 ஆம் தேதி வரை கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை - நாகா்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே அக்டோபா் 14 முதல் 22 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்குப் புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் விருதுநகா் மற்றும் மதுரை இடையே அக்டோபா் 14 முதல் 22 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் அக்டோபா் 14 முதல் 22 ஆம் தேதி வரை மதுரை மற்றும் விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்குப் புறப்பட வேண்டிய பாலக்காடு - திருச்செந்தூா் பயணிகள் ரயில் அக்டோபா் 14 முதல் 22 ஆம் தேதி வரை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பயணிகள் ரயில் அக்டோபா் 14 முதல் 21 ஆம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது (அக்டோபா் 15 மற்றும் 18 ஆம் தேதிகள் நீங்கலாக).

திருச்செந்தூா் ரயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில் அக்டோபா் 15 முதல் 18 ஆம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com