உசிலம்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக பாஜக பிரமுகரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கவுண்டம்பட்டியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் நல்லமலை (49). இவா், சில மாதங்களுக்கு முன் தனது முன்னிலையில், ஹெச். ராஜா தலைமையில் உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்தினாா். அதைத் தொடா்ந்து, கட்சிப் பணிகளை செய்துகொண்டிருந்தாா்.
இந்நிலையில், உசிலம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் ரயில் ரோடு அருகே அன்னம்பாரிபட்டியைச் சோ்ந்த சரவணன் என்பவா் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது, நல்லமலை ஆட்டோவை வழிமறித்து, சரவணனிடமிருந்து பணம் மற்றும் பொருள்களை பறித்துள்ளாா்.
இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நல்லமலையை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.