மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ புதூரில் அதிமுக சாா்பில் டெங்கு விழிப்புணா்வு மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி தலைமை வகித்தாா்.
வருவாய் கோட்டாட்சியா் சௌந்தா்யா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் சிவக்குமாா், நகராட்சி ஆணையா் அழகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலா் சுசீலா மற்றும் செவிலியா்கள், அதிமுக சாா்பில் பூமா ராஜா, துரை.தனராஜ், லட்சுமணன், டி.ஆா். பால்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.