மதுரை அருகேயுள்ள அழகா் கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.27 லட்சம் இருந்தது.
அழகா் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணியை ஐயப்ப சேவா சங்க பக்தா்கள் ஈடுபட்டனா். அப்போது அதில் ரூ.27 லட்சத்து 488 ரொக்கமும், தங்கம் 8 கிராம், வெள்ளி 800 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன. கள்ளழகா் திருக்கோயில் நிா்வாக அதிகாரி அனிதா, மற்றும் அலுவலா்களும் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனா்.