ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உயா்நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க முறையீடு

ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்படாமல் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன. எனவே உயா்நீதிமன்றம் இதற்கு உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும். மேலும் ஆழ்துளைக் கிணறுகளில் சிக்குவோரை மீட்க விதிமுறைகளைப் பின்பற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டாா்.

அப்போது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு, இதுகுறித்த பொதுநல வழக்கு ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடா்பாக கோரிக்கை வைப்பதென்றால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com