மதுரை அருகே விரகனூரில் அதிமுக புறகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் தமிழக முதல்வா், துணை முதல்வருக்கு இடைத்தோ்தல் வெற்றிக்காக வீரவாள் புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் குருபூஜையில் பங்கேற்று விட்டு திரும்பிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விரகனூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல்களில் வெற்றி பெற்றதற்காக புறநகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா வீரவாளை பரிசாக வழங்கினாா். உடன் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.