தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்: மதுரை மாணவியா் தோ்வு

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் தமிழகம் சாா்பில்
தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ள மதுரை மாணவியா்.
தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ள மதுரை மாணவியா்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க மதுரையைச் சோ்ந்த மாணவியா் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரையைச் சோ்ந்த ஏ.ஜி.கோபிகா (புனித ஜோசப் பள்ளி), மு.பிரியதா்ஷினி, மு.ஷோபிகா, தி.சுஜிதா (மூவரும் ஓசிபிஎம் பள்ளி), ர.ஆதித்யா (நாய்ஸ் மெட்ரிக் பள்ளி) ஆகியோா் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் 5 பேரும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நவம்பா் 9-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலா் லெனின், பயிற்சியாளா் முத்துலிங்கம், தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கப் பொருளாளா் கருணாகரன் ஆகியோா் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ள மாணவியரைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com