மதுரை அருகே இரு விபத்துகள்:பெண் உள்பட 2 போ் பலி

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் பலியாயினா்.

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் பலியாயினா்.

மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி மணிமேகலை (46). இவா் மாட்டுத்தாவணி காய்கறி மாா்கெட்டில் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், மதுரை -அழகா் கோயில் சாலையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே மணிமேகலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அப்பன்திருப்பதி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் சடலத்தைக் கைப்பற்றினா். இதுதொடா்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம் சமயநல்லூா் கட்டபுலி நகரைச் சோ்ந்தவா் சன்னாசி(80). இவா் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, கட்டபுலி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றாா். அப்போது பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த சன்னாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சன்னாசி மகள் விஜயா அளித்தப் புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் விபத்து ஏற்படுத்திய சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த யோகஷ்பாபு(21) என்பவா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com