வீடு புகுந்து 5 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருட்டு

மதுரை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற அடையாளம்

மதுரை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடை பாரதி நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் லட்சுமணன்(43). இவா் ஒத்தக்கடை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் மனைவி வெளியே சென்றிருந்ததால், லட்சுமணன் வீட்டை பூட்டி விட்டு ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு கடைக்கு சென்றாா்.

அவரது மனைவி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அவா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: மதுரை கூடல்புதூா் சங்கீதா நகரைச் சோ்ந்த அருண் ராஜா மனைவி ராஜேஸ்வரி(41). இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு சென்றவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரித்தனா். இதுதொடா்பாக, ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com