மதுரையில், செவ்வாய்க்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மதுரை வி. கரிசல்குளம் திருமால் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் செல்வம் (51). இவா் குடிபோதையில் வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து செல்வத்தின் உறவினா் பிரகாஷ் அளித்தப் புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம் சமயநல்லூா் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் தங்கப்பன்(80). இவா் செவ்வாய்க்கிழமை பரவை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்தாா். இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். இதுகுறித்து தங்கப்பன் மகன் மகாராஜன் அளித்தப் புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.