மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றுள்ள நபருடன் மது அருந்தியதாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து 3 போலீஸார் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி முத்துகிருஷ்ணன். இவர் சில நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே சென்றார். இந்நிலையில் அவருடன் விடுதி ஒன்றில் மதுரை சிறைத்துறை உதவி ஜெயிலர் முனியாண்டி மற்றும் முதல்நிலை காவலர்கள் மணி, மூர்த்தி ஆகியோர் மது அருந்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டுள்ளார்.