பணிநீக்க காலத்தை முறைப்படுத்த சாலைப் பணியாளர்கள் கோரிக்கை

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
      இச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் த. மனோகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் இரா. தமிழ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
      தமிழகம் முழுவதும்  சாலைப் பணியாளர்கள் பணி நீக்கத்திலிருந்த 41 மாத காலத்தை பணி காலமாக முறைப்படுத்துவது, சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com