காதணி பறிப்பு:  காது அறுந்து மூதாட்டி காயம்

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த தங்க காதணியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றதில், மூதாட்டியின் காது அறுந்து காயம் ஏற்பட்டது.

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த தங்க காதணியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றதில், மூதாட்டியின் காது அறுந்து காயம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், பன்னியான் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி மனைவி மாயக்காள் (80). இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் வீட்டில் புகுந்து மாயக்காள் காதில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கக் காதணியைப் பறித்துச் சென்றார். இதில், மாயக்காளின் காது அறுந்து, காயம் ஏற்பட்டது. இது குறித்து அவரது மகன் பாண்டி அளித்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உண்டியல் உடைப்பு: மதுரை மாவட்டம் பூலாம்பட்டி கிராமத்தில் மலையாள கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் உண்டியல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக, கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அடையாளம் தெரியாத இருவர் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆலையில் திருட்டு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர், அதே பகுதியில் எண்ணெய் எடுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆலையின் பின்புறம் கதவை உடைத்து, உள்ளே புகுந்து ரூ. 20ஆயிரம் ரொக்கம், தொலைக்காட்சி பெட்டி, கணினி பாகங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com