பைக் திருடிய 2 பேர் கைது

மதுரையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மதுரையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை சுந்தராஜன்புரம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (41), வீட்டின் முன் திங்கள்கிழமை நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில், மதுரை எம்.கே.புரம் வள்ளுவர் நகரைச் சேர்ந்த திருப்பதி(23), மற்றும் முனியசாமி(27) என்பதும், சௌந்தரின் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தை  திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com