வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்

நீதிமன்ற உத்தரவின்படி பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

நீதிமன்ற உத்தரவின்படி பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் பதவி உயர்வு பெற்று உதவியாளராகப் பணியாற்றி வருபவர்களுக்கும்,  நேரடி நியமன உதவியாளர்களுக்கும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதில் கடந்த 2017-இல் வழங்கப்பட்ட துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் தகுதியற்ற நபர்களை நீக்கி, உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 பதவி உயர்வு பிரச்னை தொடர்பாக வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினரும், நேரடி நியமன வருவாய் உதவியாளர்கள் சங்கத்தினரும் கடந்த வியாழக்கிழமை போட்டி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் அறை முன்பாக அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
வருவாய்த் துறை அலுவலர்களின் காத்திருக்கும் போராட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாகத் தொடர்ந்த நிலையில், பின்னர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் பேச்சு நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com