மதுரை பிரஜா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில், ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு வளாகத்தில் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, இந்த ஆன்மிக கொலு கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், அமர்நாத் பனி லிங்கம் தரிசனம், நவதேவிகள் தரிசனம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இக் கொலுவை, தினமும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.