மேலூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி சாவு

மேலூர் அருகே குளத்தில் தாயாருடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.


  மேலூர் அருகே குளத்தில் தாயாருடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
நாவினிப்பட்டி ஊராட்சி சின்னபெருமாள்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகள் நிர்மலாதேவி (12). இவர், மேலூரில் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துவந்தார்.  இந்நிலையில், தனது தாயார் முனியம்மாளுடன் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, குளத்தில் பள்ளமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார்.
 தகவலறிந்த மேலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com