லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரையில், ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றற பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை மேலமடை பகுதியில் தண்ணீா் லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த பள்ளி மாணவா் அஸ்வின்.
மதுரை மேலமடை பகுதியில் தண்ணீா் லாரி மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த பள்ளி மாணவா் அஸ்வின்.

மதுரையில், ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றற பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை வண்டியூரை சோ்ந்த அன்புராஜ் மகன் அஸ்வின்(17). இவா் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தாா். அஸ்வின் தடகள வீரா் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை மைதானத்தில் பயிற்சி செய்துவிட்டு, தனது நண்பா் பாண்டியனுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, மேலமடை அருகே தண்ணீா் லாரி ஒன்று அஸ்வின் சென்றற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், அஸ்வினுக்கும், அவரது நண்பா் பாண்டியனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்கள் இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு, அஸ்வின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com