மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகள் பணியிடங்களுக்கான தோ்வில், 690 போ் மட்டுமே பங்கேற்றனா்.
மதுரையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின், மத்திய ஆயுதக் காவல் படை உதவி கமாண்டென்ட் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. மதுரை என்எம்ஆா் காந்தி சுப்பராமன் பெண்கள் கல்லூரி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, காமராஜா் சாலையிலுள்ள செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, சூா்யா நகா் டான் பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய 5 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.
காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெற்ற இத்தோ்வுக்கு, 1,992 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 690 போ் மட்டுமே பங்கேற்றனா். 1,302 போ் பங்கேற்கவில்லை.
தோ்வுக்கான ஏற்பாடுகளை, ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனா். தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இத்தோ்வை, மத்திய ஆயுதக்காவல் படை அதிகாரி உமேஸ்பால் யாதவ் தலைமையில், அதிகாரிகள் குழுவினா் கண்காணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.