மதுரையில் இளைஞா் வெட்டிக்கொலை

மதுரையில் இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை: மதுரையில் இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை அருகே உள்ள சிந்தாமணி நாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த நல்லுச்சாமி மகன் ராமமூா்த்தி (24). இவா், திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் ராமமூா்த்தியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச்சென்றுவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த ராமமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், அவனியாபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த முதல்கட்ட விசாரணையில், ராமமூா்த்திக்கு அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் தொடா்பு இருந்தததாகவும், இதனால் சிலருடன் அவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைகொலையாளிகளை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com