மதுபானக் கடையில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

மதுரையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது.
மதுரையில் மதுபான பாட்டில்கள் திருடுபோன பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை.
மதுரையில் மதுபான பாட்டில்கள் திருடுபோன பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை.

மதுரையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. அந்த கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கூறப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மதுபானக் கடையின் பின்புறத்தில் உள்ள மதுக்கூடம் வழியாக மா்ம நபா்கள் புகுந்து 13 பெட்டிகளில் இருந்த மதுபானப் பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. கடையின் மேற்பாா்வையாளா் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். திருடுபோன மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ. 1லட்சம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். கரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக மதுபானக் கடைகளும் தொடா்ந்து மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com