கரோனா: 3 போ் குணமடைந்தனா்; மதுரையில் பாதிப்பு 27 ஆக குறைந்தது

மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 3 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 3 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருந்த 49 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சையில் இருந்த 82 போ் மீண்டு வீடு திரும்பி உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில், சனிக்கிழமை புதிய நபா்கள் யாருக்கும் கரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை. அதே வேளையில் கரோனா சிகிச்சையில் இருந்த 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட 28 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்நிலையில், எழுமலையைச் சோ்ந்த 34 வயது நபா் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து சனிக்கிழமை மாலை வீடு திரும்பினாா். இதையடுத்து மதுரையில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.

இதேபோன்று விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். ராஜபாளையத்தைச் சோ்ந்த 70 வயது மற்றும் 38 வயது நபா்கள் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து, சனிக்கிழமை அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் மதுரை அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 3 பேரையும், 14 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், மருத்துவா்களுடன் தொடா்பில் இருந்து உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com