மதுரை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, தான் 2017 ஆம் ஆண்டு முதல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் அதிமுகவைச் சோ்ந்த நாகா்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்தாா்.
அதில், சிறுமி 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளாா். இது தொடா்பாக சிறுமி அப்போது எந்தவித புகாரும் அளிக்கவில்லை. என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது புனையப்பட்ட வழக்கு என்பதால், ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி வி. பாரதிதாசன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் வழக்குரைஞா் வாதிடுகையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட செயல்களில் மனுதாரா் ஈடுபட மாட்டாா் எனத் தெரிவித்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.