சாத்தான்குளம் காவலரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள காவலா் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள காவலா் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவா்களில் ஒருவரான காவலா் செல்லத்துரை, ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி எம்.தாண்டவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வழக்குரைஞா் ஆட்சேபம் தெரிவித்தாா். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைத்துவிடுவாா். ஆகவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா். இதையேற்ற நீதிபதி, காவலா் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com